ரேஷன் அரிசி மூட்டைகள் குவிண்டால் கணக்கில் பறிமுதல்..!

கடந்த 01.06.2023 முதல் 30.06.2023 வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ.49,41,826/- (ரூபாய் நாற்பத்தொன்பது லட்சத்து நாற்பத்தொராயிரத்து எண்ணூற்று இருபத்தாறு மட்டும்) மதிப்புள்ள 3877 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி,
441 எரிவாயு உருளைகள், 201 கிலோ கோதுமை, 101 கிலோ துவரம் பருப்பு, 1997 லிட்டர் மண்ணெண்ணெய், 7 பாக்கெட் பாமாயில் ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 187 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன.
குற்றச் செயலில் ஈடுபட்ட 593 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.