இன்று ரத சப்தமி : இன்று 7 எருக்கை இலையில் மீது சிறிது எள், திருநீறு வைத்து ஆண்கள் நீராட வேண்டும்..!

ரத சப்தமி தினத்தில் அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து குளித்து பூஜைக்கு தயாராக வேண்டும். விரதமிருந்து, காலையில் தீபமேற்றி வழிபட வேண்டும்.
பொதுவாக நாம் காலையில் குளித்து சூரியனை வணங்குவதைப் போல் வணங்கி, அவருக்கு தீபாராதனை செய்ய வேண்டும்.
ரத சப்தமி கோலம்:
ரத சப்தமி தினத்தில் நாம் செய்யும் வழிபாட்டுக்கு நிகராக, நாம் போடும் கோலம் அமையும்.
நம் வீட்டில் துளசி மாடம் இருந்தால் அதன் முன் சாணம் தெளித்து அரிசி மாவில் ஒரு ரதம் போன்ற கோலமிட்டு, அதில் சூரியன் நடுவில் இருப்பது போன்ற கோலமிடுவது சிறந்தது. இந்த கோலத்திற்கு அருகில் ஒரு சந்திரனின் படம் இருப்பது போலவும் வரையவும்.
அந்த இடத்தில் மாவிளக்கு ஏற்றியும், பொங்கலிட்டும் வழிபடலாம்.
அன்றைய தினத்தில் எள் உருண்டை செய்து தானம் செய்ய மிகச்சிறந்த பலன்கள் ஏற்படும்.
ரத சப்தமி விரத பலன்கள்:
எல்லா வித தலைமைப் பொறுப்புகளை வேண்டுவோர் வழிபடக்கூடிய முக்கியமானவர் சூரிய பகவான்.
அரசு வேலையில் உயர்பதவி வேண்டுவோர், பதவி தொடர்பாக தடைகள் உள்ளவர்கள், வழக்குகளில் வெற்றி வேண்டுபவர்கள் இந்த ரத சப்தமி விரதம் இருந்து சூரியனை வழிபடுவது நல்லது.
குறிப்பாக ஆற்றங்கரையில் நீராடி விட்டு சூரியனை வணங்குவது மிகவும் சிறப்பு.
எருக்கை இலை வைத்து நீராடுவது நல்லது. 7 எருக்கை இலையில் மீது சிறிது எள், திருநீறு வைத்துக் கொண்டு ஆண்கள் நீராட வேண்டும்.
பெண்கள் எருக்கை இலை, எள், மஞ்சள் வைத்து குளிக்க வேண்டும்.
இதனால் நீத்தார் கடன் செய்த புண்ணியம் கிடைக்கும்.
இப்படி நீராடுவதால் பீஷ்மருக்குத் தர்ப்பணம் செய்த புண்ணியம் கிடைக்கும். இதனால் பீஷ்மர் அருளாசி கிடைக்கும்.
உங்களுக்கு எருக்கை இலை கிடைக்கவில்லை என்றால், கவலை வேண்டாம். எள், திருநீறு கிடைக்கும் அதை வைத்து எருக்கை இலை இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டு கையில் பிடித்து குளித்து சூரியனை வழிபடுவது அவசியம்.
வெளிநாட்டில் அல்லது நீர் நிலை அருகில் இல்லாதவர்கள், வீட்டிலேயே எள், திருநீறு வைத்து பீஷ்மரை மனதில் நினைத்து நீராடுதல் நல்லது.
வழிபாட்டின் போது என்ன செய்ய வேண்டும்?
வழிபாட்டின் போது என்ன செய்ய வேண்டும்?
குளித்த பின் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
ஆதித்ய ஹிருதயம், விஷ்ணு சஹஸ்ரநாமம், சூரிய சஹஸ்ரநாமம் பாராயணம், காயத்ரி மந்திரம் ஜெபித்து வழிபடலாம்.
திருப்பதியில் ரத சப்தமி:
திருமாலின் அம்சமே சூரிய பகவான் என்பதால், ரத சப்தமி தினத்தில் திருப்பதியில் சூரிய பிரபை வாகனத்தில் எம்பெருமான் எழுந்தருளுவார்.