ரம்ஜான் பண்டிகை: வங்கிகளுக்கு விடுமுறை இல்லை!

அரசு விடுமுறை நாளான ரம்ஜான் பண்டிகை அன்று மார்ச் 31 (திங்கட்கிழமை) வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜான் இந்த ஆண்டு வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட இந்த தினம், நடப்பு நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வங்கிகளும் வழக்கமான வேலை நாளாகவும், அரசு பரிவர்த்தனை செயல்பாடுகளுக்காகவும் திறந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.