1. Home
  2. தமிழ்நாடு

முப்படை தளபதிகள் உடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!

1

ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் நோக்கி இந்திய எல்லையை நோக்கி ட்ரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனை இந்திய ராணுவம் உரிய நேரத்தில் தடுத்து நிறுத்தி அழித்து வருகின்றனர். இதனால் எந்தவித உயிர் சேதமும் இதுவரை ஏற்படவில்லை. நேற்று தொடங்கிய தாக்குதல் தற்போது வரை முடியவில்லை.

பாகிஸ்தான் விடிய விடிய தாக்குதல் நடத்தி வருவதால், இந்தியாவும் விடிய விடிய பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் சுமார் 35 நிமிடங்கள் ட்ரோன் தாக்குதலை பாகிஸ்தான் நிகழ்த்தியுள்ளது. ஆனால் அனைத்து முயற்சிகளையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. ட்ரோன் தாக்குதலை அடுத்து வீரர்கள் ஊடுருவ முயற்சித்தனர். அதையும் இந்தியா முறியடித்து விட்டது.

நாட்டின் பாதுகாப்பு சூழல் குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். இதுதொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தலைமை தளபதி, முப்படைகளின் தளபதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இன்னும் சற்று நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நள்ளிரவு நேரம் என்பதால் எப்படியாவதும் இந்திய எல்லைக்குள் ஊடுருவி அல்லது தாக்குதலை தீவிரப்படுத்த பாகிஸ்தான் ராணுவம் முயற்சித்து வருகிறது. ஆனால் அவர்களின் ஒவ்வொரு நகர்வையும் முறியடித்து இந்திய ராணுவம் அதிரடி காட்டி கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் பிரதான இலக்காக ஜம்மு காஷ்மீர் மாறியுள்ளது. தற்போது உச்சகட்ட பதற்றத்தில் எல்லையோர மாநிலங்கள் இருக்கின்றன. எனவே பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like