1. Home
  2. தமிழ்நாடு

கலைஞர் 100 விழாவில் ரஜினிகாந்த் பேச்சு..!

1

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசிடம் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில் எதிர்பாராதவிதமாக சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கி, பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாலை 5 மணி அளவில் ‘கலைஞர் 100’ நிகழ்வு தொடங்கியது. 

இந்த விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த்துடன் கலந்து கொண்டார். அதே போல கமல், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அதே போல, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், கௌதமி, நடிகர் சிவராஜ் குமார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் வடிவேலு, கார்த்தி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் வெற்றிமாறன், நடிகை ரோஜா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், தங்கர் பச்சான், டி.ராஜேந்திரன், ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். ஆந்திர அமைச்சர் மீனாவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழா மேடையில் பேசிய கமல்ஹாசன் மேடையின் ஒரு ஒரத்தில் நின்று பேசினார். அப்போது அவர் பேச்சினை தொடங்கும்போது, “ என்னடா ஒரு ஓரமா நின்னு பேசறேன்னு நினைக்கறீங்களா? கலைஞர் மேடையில் நான் எப்போதும் ஒரு ஓரமாத்தான் இருப்பேன் என பேசி தனது பேச்சினை தொடங்கினார். இதற்கு அனைவரும் கரகோசம் எழுப்பினர். கலைஞர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ஆர் எனது தமிழ் அசான்கள் என கமல்ஹாசன் பேசியுள்ளார். 

என்னுடைய நண்பர் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்திய அரசியல் பண்புக்கு முதலில் வணக்கம் செலுத்துகிறேன் முதல்வரின் இந்த பண்பு எங்கிருந்தது என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் இந்த வணக்கம் கலைஞருக்கும் உறுத்தானதுதான் என கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசுகையில் கமல்ஹாசன் பேசியுள்ளார். 

கலைஞருக்கு எந்த விழா எடுத்தாலும் வரிச்சலுகை, வரி விலக்கு என்று ஏதாவது ஒரு எதிர்பார்ப்புடனே விழா எடுக்கப்படும். ஆனால் இந்த விழா அவர் செய்த உதவிகளுக்கான நன்றிகளுக்கான தொகுப்பு விழா என கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் கமல் ஹாசன் பேசியுள்ளார். 

கலைஞரும் தமிழும், கலைஞரும் சினிமாவும், கலைஞரும் அரசியலும் பிரிக்க முடியாதவை. பாடல்கள் பிடியில் இருந்த சினிமாவை வசனம் வசப்படுத்தியவர் கலைஞர். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய ஆளுமைகளை தன் எழுத்தால் உச்ச நட்சத்திரம் ஆக்கியவர் கலைஞர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்களுடன் உரையாடுவதை விடக்கூடாது என்று அவரிடம் கற்றதால்தான் பிக்பாஸ் மூலம் மக்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன் என கலைஞர் நூற்றாண்டு விழாவில் கமல்ஹாசன் பேசியுள்ளார். 

கலைஞர் 100 விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது கலைஞர் குறித்து பேச ஆரம்பித்தால் எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என எனக்கு தெரியாது. அந்தளவிற்கு கலைஞரால் ஈர்க்கப்பட்டவன் நான். கலைஞர் அரசியலுக்கு செல்லாமல் சினிமாவிலேயே இருந்திருந்தால் எத்தனையோ சிவாஜி,   எம்ஜிஆரை உருவாக்கி இருப்பார். ஒருவருக்கு எழுத்தாற்றல் இருந்தால், பேச்சாற்றல் இருக்காது. ஆனால் கருணாநிதிக்கு இந்த இரண்டுமே இருந்தது.

தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதங்களை படித்தால் கண்களில் கண்ணீர் வரும். சிலவற்றை படித்தால் நெருப்பு வரும். சிலபேர் தன்னுடைய அறிவை காட்டுவதற்காக பேசுவார்கள். மற்றவர்களுக்கு புரிகிறதா என்று யோசிக்கமாட்டார்கள். ஆனால் கருணாநிதி அறிஞர் சபையில் அறிஞராகவும், கவிஞர் சபையில் கவிஞராகவும் பாமரனுக்கு பாமரனாகவும் பேசுவார்.

என் படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதுகிறார் என்று சொன்னதும், அந்த படத்தில் நடிக்கவில்லை என்று அவரிடம் சொல்வதற்காக சென்றேன். ஏன் என்றால் எனக்கு அப்போது தமிழ் பெரிதாக வராது. நான் இதை அவரிடம் கூறியபோது, ‘சிவாஜி நடித்தால் சிவாஜிக்கு ஏற்ற மாதிரி வசனம் எழுதுவேன். யார் நடிக்கிறார்களோ, அவர்களுக்கு ஏற்ற மாதிரி வசனம் எழுதுவேன்’ என்று பதிலளித்தார்.

வழக்கமாக கருணாநிதி ஒரு நடிகருடன் சேர்ந்து படம் பார்ப்பார். அது தேர்தல் நேரம். அந்த நடிகர் ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வந்தபோது பத்திரிகையாளர்கள் அவரிடம் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கேட்டனர். ‘இரட்டை இலைக்கு’ என்று அந்த நடிகர் சொன்னது அப்போது ட்ரெண்டாகி விட்டது. அன்று மாலை கருணாநிதியுடன் சேர்ந்து படம் பார்க்க வேண்டும். ஆனால் எப்படி செல்வது என்று தெரியாமல் குளிர் காய்ச்சல் என்று சொல்லிவிட்டார் அந்த நடிகர். ஆனால் அவர் வரவேண்டும் என்று கருணாநிதி கூறிவிட்டார். தியேட்டருக்கு சென்றபோது, ‘வாங்க, காய்ச்சல்ன்னு சொன்னீங்களாமே, ‘சூரியன்’ பக்கத்துல உட்காருங்க’ என்று சொன்னார். அந்த நடிகர் வேறு யாருமல்ல. நான் தான்.

திராவிட இயக்கம், திராவிடர் கழகம், அறிஞர் அண்ணா, கலைஞர் குறித்து எழுத்தாளர் ஜெயகாந்தன் வைக்காத விமர்சனமே இல்லை. ஆனால், அவரே உடல்நலம் குன்றி இருந்தபோது மருத்துவத்திற்கு உதவி செய்தவர் கலைஞர்.கலைஞரின் காலத்தில் வாழ்ந்தோம் என்பதே மிகப்பெரிய விசயம். அவருடன் நாம் பேசிப் பழகியது மிகப்பெரிய பாக்கியம்

‘உங்களுக்கு ஆண்டவனை பிடிக்காது. ஆனால் ஆண்டவனுக்கு உங்களை பிடிக்கும் என்று அவரிடமே சொன்னேன். முதல்வர் ஸ்டாலின் தன் அப்பா பெயரை காப்பாற்ற வேண்டும். காப்பாற்றுவார் என்று நம்பிக்கை உள்ளது. அவர் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும்.” இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Trending News

Latest News

You May Like