ரிஷிகேஷில் சாமியார்களுடன் சுதந்திர தினம் கொண்டாடிய ரஜினிகாந்த்..!!
![rajinikanth](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/8a9889b6c5d85b18663f1728f9a6dd02.jpg?width=836&height=470&resizemode=4)
தமிழ் திரைப்பட மக்கள் எதிர்பார்த்து வந்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 10-ம் தேதி திரைக்கு வந்தது. அதையடுத்து ரஜினிகாந்த் இமயமலைக்குச் செல்ல முடிவு செய்தார். அதற்கு முன்னதாக சில வடமாநில கோயில்களுக்கு அவர் பக்தி யாத்திரை சென்றுக்கொண்டிருக்கிறார்.
தற்போது ரிஷிகேஷில் இருக்கும் தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு அவர் சென்றுள்ளார். அங்குள்ள தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தார். அவருக்கு ஆசிரமத்தில் இருந்த சாமியார்கள் விமர்சையாக வரவேற்பு கொடுத்தனர்.
அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி, சாமியார்களுடன் அமர்ந்து உணவு உண்டார். பிறகு பத்ரிநாத் கோயிலுக்குச் சென்று ரஜினி வழிபாடு நடத்தினார். ரஜினி கோவிலுக்கு வந்த தகவல் அறிந்ததும் அவரைக்காண ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். அவர்களுடன் சிறிது நேரம் ரஜினி உரையாடினார்.
ஏற்கனவே அங்குள்ள கோயிலுக்கு ரஜினி வருகிறார் என்கிற செய்து முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதனால் உரிய பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நாளை 77-வது சுதந்திர தினத்தையொட்டி நடிகர் ரஜினி துவாரஹாத்தில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் சுவாமிகளுடன் இணைந்து தேசிய கொடி ஏந்தி கொண்டாடினார். மேலும் ஆதி பத்ரிநாத் கோயிலில் 3000 ஆண்டு பழமையான சுயம்பு மகாவிஷ்ணுவை வழிபட்டார்.