1. Home
  2. தமிழ்நாடு

வெறும் 13 வயதில் ஐபிஎல் அணிக்காக விளையாட இருக்கும் வீரர்..! யார் தெரியுமா ?

1

கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வரும் ஐபிஎல் சீசனின் 13 வயது வீரர் ஒருவரை களமிறக்க உள்ளது. அதாவது பீகாரில் உள்ள தாஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் அணியால் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

 

வெறும் 13 வயதே ஆன இந்த பாலகன் ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்க உள்ளார். இதன்மூலம் மிக இளம் வயதில் ஐபிஎல்லில் விளையாடும் வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் பயணம் அவருக்கு நான்கு வயதிருக்கும் போது தொடங்கியது. விவசாயியான அவரது தந்தை, தனது மகனின் கிரிக்கெட் மீதான அன்பைக் கவனித்தார். 

 

மகனை ஊக்குவிக்க அவர்களின் கொல்லைப்புறத்தில் ஒரு சிறிய விளையாட்டுப் பகுதியை உருவாக்கினார், பின்னர் வைபவின் கிரிக்கெட் கனவுகளை ஆதரிக்க தனது பண்ணையை விற்றார். வைபவ் ஒன்பது வயதில் சமஸ்திபூரில் உள்ள ஒரு கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். அங்கு முன்னாள் ரஞ்சி வீரரான மனிஷ் ஓஜாவின் கீழ் பயிற்சி பெற்றார். வைபவ்வின் வாழ்க்கையை வடிவமைப்பதில் மனிஷ் ஓஜா முக்கிய பங்கு வகித்தார்.

வைபவ் சூர்யவன்ஷி தனது 12 வயதில் பீகார் அணிக்காக வினூ மன்கட் டிராபியில் விளையாடினார். ஐந்து ஆட்டங்களில் சுமார் 400 ரன்கள் எடுத்தார். ஆந்திராவில் நடந்த 19 வயதுக்குட்பட்ட நாற்கரத் தொடருக்காக இந்தியா B அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அங்கு அவர் இங்கிலாந்துக்கு எதிராக 41 ரன்களும், இந்தியா A அணிக்கு எதிராக 8 ரன்களும் எடுத்தார்.

இந்த சிறப்பான ஆட்டம் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து வைபவ் சூர்யவன்ஷி பீகாரின் ரஞ்சி டிராபி அணியில் சேர்ந்தார். வெறும் 12 வயது மற்றும் 284 நாட்களில் முதல் தர கிரிக்கெட்டில் அவர் அறிமுகமானார்.  இதன்பிறகு 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்த இந்த பாலகன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அறிமுகப் போட்டியிலேயே வெறும் 58 பந்துகளில் சதம் அடித்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். 

இதனைத் தொடர்ர்ந்து 2024 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் பயணத்திலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். இரண்டு அரை சதங்கள் அடித்தார். இது இந்திய கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக அவரது அந்தஸ்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. சில நாட்களுக்குப் பிறகு அவர் தனது லிஸ்ட் ஏ அறிமுகத்தை மேற்கொண்டார்.

அண்மையில் நடந்த விஜய் ஹசாரே டிராபியிலும் வைபவ் சூர்யவன்ஷி பிரகாசித்தார். டிசம்பர் 31, 2023 அன்று பரோடாவுக்கு எதிராக பீகார் அணிக்காக 42 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். ஐந்து முதல் தர போட்டிகளில்,  10 நிமிடங்களில் 100 ரன்களை எடுத்துள்ளார். ஆறு லிஸ்ட் ஏ போட்டிகளில் 22 நிமிடங்களில் 132 ரன்கள் எடுத்துள்ளார். தனது அதிவேகமான ரன்களை குவிக்கும் திறன் மூலம் இப்போது ஐபிஎல்லிலும் இடம்பிடித்து விட்டார். 

Trending News

Latest News

You May Like