1. Home
  2. தமிழ்நாடு

சென்னை செங்கல்பட்டு உட்பட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..!

1

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை அண்மையில் தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சியை ஒட்டியுள்ள மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல் உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய இரு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like