1. Home
  2. தமிழ்நாடு

கேரளா செல்கிறார் ராகுல் காந்தி..!

1

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் ராகுல்காந்தி ஏப்ரல் 3-ம் தேதி கேரளா சென்று அன்றைய தினம் மதியம் 12 மணியளவில் கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதனைத் தொடர்ந்து ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் ரோடு ஷோ நடத்துகிறார். 

அதன்பிறகு அவர் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் பிரச்சாரத்துக்காக கேரளாவில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 26-ம் தேதிக்கு முந்தைய நாட்களில் கேரளாவுக்கு மீண்டும் வருகிறார். அப்போது அவர் வயநாடு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். 

ராகுல்காந்தியின் வருகை குறித்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராகுல் காந்தியை வரவேற்க தயாராகி வரும் காங்கிரஸ் நிர்வாகிகள், அவரது பிரச்சார பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ராகுல் காந்தியும் பிரச்சாரத்துக்கு வந்துவிடும் பட்சத்தில், வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Trending News

Latest News

You May Like