1. Home
  2. தமிழ்நாடு

தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி : கோவை, நெல்லையில் பிரச்சாரம்..!

1

பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. 

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தமிழகத்தில் 9 தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரும் 15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். சில இடங்களில் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கிறார்.

இதற்கிடையில் தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர். இந்நிலையில், ராகுல்காந்தி வரும் 12-ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது அவர் கோவை மற்றும் நெல்லை தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  மேலும் ராகுல்காந்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து இந்த பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். 

Trending News

Latest News

You May Like