1. Home
  2. தமிழ்நாடு

ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர் நினைவிடத்தில் ராகுல் மரியாதை..!

1

ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் 175 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நாளை 13-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. 

இந்நிலையில், ஆந்திர காங்கிரஸ் தலைவர் சர்மிளாவுக்கு ஆதரவு தெரிவித்து கடப்பா தொகுதியில் நேற்று ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக ஆந்திரா வந்த ராகுல் காந்தி இடுபுலுபாயாவில் உள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகரின் நினைவிடத்திற்கு சென்று அங்கு அவருக்கு மாரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் ஒய்.எஸ்.ஆர். சர்மிளா மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர். 

Trending News

Latest News

You May Like