இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு ஆபரேஷன் நடத்தினாலும் எதிர் தாக்குதலுக்கு தயார் - ரகு நாயர்..!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்ற தாக்குதல் சம்பவம் நேற்று மாலை 5 மணி அளவில் முடிவுக்கு வருவதாக இருதரப்பும் உறுதிப்படுத்தியது. இந்த நிலையில் இந்தியாவின் முப்படை தளபதிகள் சார்பில் நிருபர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது ராணுவ கமாண்டர் ரகு நாயர் பேசுகையில், முப்படைகளும் எப்போதும் தயாராக உள்ளது. இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு ஆபரேஷன் நடத்தினாலும் எதிர் தாக்குதலுக்கு தயார் என ரகு நாயர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக பொய் தகவல்களை பரப்பி வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தவிர பாகிஸ்தான், இந்தியா மீது இனி வரும் நாட்களில் தாக்குதல் நடத்தினால் திருப்பி தாக்குவோம் என கூறப்பட்டது. இந்தியாவுக்கு எதிராக எந்த ஆபரேஷன் நடத்தினாலும் எதிர் தாக்குதலுக்கு தயார் என ரகு நாயர் தெரிவித்தார்.