ராஜஸ்தான் பந்துவீச்சை நாசம் செய்த பஞ்சாப்! என்னா அடி!!
![ராஜஸ்தான் பந்துவீச்சை நாசம் செய்த பஞ்சாப்! என்னா அடி!!](https://newstm.in/static/c1e/client/106785/migrated/439c5c9bc09569ac227633a6602ceca8.webp?width=836&height=470&resizemode=4)
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 224 ரன்களை இலக்கா நிர்ணயித்துள்ளது.
பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுலும்,மயங் அகர்வாலும் அதிரடியாக விளையாடி அற்புதமான தொடக்கத்தை கொடுத்தனர். ராஜஸ்தான் வீரர்கள் வீசிய பந்துகளை இருவரும் நாலா புறமும் பறக்கவிட்டனர்.
முதல் விக்கெட்டிற்கு 183 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.மயங்க் அகர்வால் 50 பந்துகளில் 106 ரன்களை குவித்து அவுட்டானார். கே.எல் ராகுல் 69 ரன்கள் அடித்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 223 ரன்கள் எடுத்தது.
newstm.in