1. Home
  2. தமிழ்நாடு

பொதுமக்களே உஷார்.. போலி ஹால்மார்க் முத்திரையுடன் தங்க நகை..!

பொதுமக்களே உஷார்.. போலி ஹால்மார்க் முத்திரையுடன் தங்க நகை..!


கோவை மாவட்டத்தில், தங்க நகையில் போலி 916 ஹால்மார்க் முத்திரையிடும் ஆசாமிகள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்க நகைகள் வாங்குவது வழக்கம். இந்த நிலையில், பொதுமக்களின் நகை வாங்கும் ஆர்வத்தை பயன்படுத்தி தள்ளுபடி முறையில் தங்க நகைகள் தரப்படுமென நகைக் கடைகள் அறிவிக்கின்றன.

நகைக் கடைகளில் தள்ளுபடி நியாயமான முறையில் தரப்பாட்டலும் இந்த பண்டிகை காலத்தினை பயன்படுத்தி போலி நகைகள் விற்கப்படுகின்றன. இந்நிலையில், இந்திய தர நிர்ணய அதிகாரி மீனாட்சி தலைமையில் 10 பேர் கொண்ட குழு கோவையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தங்க நகையில் போலி 916 ஹால்மார்க் முத்திரையிடும் ஆசாமிகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்ததுடன், போலி முத்திரை பதிக்கும் உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.

Trending News

Latest News

You May Like