தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை பொது விடுமுறை..!!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/d0d7db006fa45f12c78682b24e1f1e90.webp?width=836&height=470&resizemode=4)
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் கல்லூரிகள். தனியார் நிறுவனங்கள் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை 20:12.2023 (புதன் கிழமை) ஒரு நாள் மட்டும் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறை நாளை ஈடுசெய்ய வருகின்ற 06.01.2024 (சனிக்கிழமை) வேலை நாளாக அனுசரிக்கப்படும். அத்தியாவசிய சேவைகள் வழங்கும் துறையான வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு, உள்ளாட்சி துறை. பால், குடிதண்ணீர். எரிபொருள் உணவக பணியாளர்கள் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் உள்ளுர் விடுமுறை பொருந்தாது என அறிவிக்கப்படுகிறது.