கணவருடன் பிரச்சனை !! 4 ஆண்டுகள் தனிமையில் வாழ்க்கை !! கறிக்கடைகாரரிடம் ஏற்பட்ட கள்ளக் காதல் !! கொலையில் முடிந்த சம்பவம்
கோயம்புத்தூர் மாவட்டம் , நேருநகர் பகுதியில் வசித்து வருபவர் திலகவதி. கருத்து வேறுபாட்டினால் கணவருடன் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் திலகவதிக்கு , அப்பகுதியில் கறிக்கடை நடத்தி வந்த , பத்மநாபன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி சந்தித்து நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் பத்மநாபனுக்கு, திலகவதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.
இதுகுறித்து அவர் திலகவதியிடம் கூறியநிலையில் அவர் ஒரு சில காரணங்களை கூறி மறுப்பு தெரிவித்து விட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திலகவதியை வழக்கமாக சந்திக்கும் தகர கொட்டகைக்கு வர கூறியுள்ளார்.
அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் அருகிலிருந்த சுத்தியலால் திலகவதி அடித்த கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் தானும் அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் தனது மகளை காணவில்லை என திலகவதியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவர்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தகரக் கொட்டகைக்குள் இருந்து திலகவதி மற்றும் பத்மநாபனின் உடல் கைப்பற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Newstm.in