பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து..!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஹிந்து மக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' தளப்பதிவில், 'இந்தத் தீபாவளி திருநாளில் நாட்டு மக்கள் ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளம் பெற்று வாழ வாழ்த்துகிறேன். லட்சுமி, கணேஷா கடவுள்களின் ஆசிபெற்று, அனைத்து வளமும் பெற வேண்டுகிறேன்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த பிறகு முதல் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதற்கான மகிழ்ச்சியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். ராமர் கோவில் பக்தர்களின் எண்ணிலடங்கா தியாகம் மற்றும் வேண்டுதலினால், 500 ஆண்டுகளுக்குப் பிறகு புனித நிகழ்வு நடப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், கடவுள் ராமரின் வாழ்க்கையும், அவரது லட்சியங்களும், நாட்டு மக்களுக்கு உத்வேகமாக நீடிக்கும் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
देशवासियों को दीपावली की अनेकानेक शुभकामनाएं। रोशनी के इस दिव्य उत्सव पर मैं हर किसी के स्वस्थ, सुखमय और सौभाग्यपूर्ण जीवन की कामना करता हूं। मां लक्ष्मी और भगवान श्री गणेश की कृपा से सबका कल्याण हो।
— Narendra Modi (@narendramodi) October 31, 2024