நிவாரணத் தொகை எதையும் கொடுக்காமல் வெறும் கையால் முழம் போடுகிறார் பிரதமர் - முரசொலி..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/abd2a64c51a1f5cd8580c0487092800c.webp?width=836&height=470&resizemode=4)
குஜராத்தில் வெள்ளம் ஏற்பட்டதும் அன்றைய தினமே அங்கு போய் பார்க்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஒரு மாதம் கழித்து தமிழ்நாட்டிற்கு வந்த போதும் வெள்ளம் பாதித்த பகுதி மக்களைப் பார்க்கவில்லை. குஜராத்துக்கான நிதியை வெள்ளம் ஏற்பட்ட அன்றைய தினமே பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கிறார். தமிழ்நாடு ஒரு மாதமாக தட்டேந்தி நிற்பது பிரதமர் கண்ணுக்குத் தெரியவில்லை.
பேரிடர் நிவாரணத் தொகையைக் கொடுக்க மனமில்லை; அதனால் மத்திய அரசு கொடுக்கவில்லை” என்று கடுமையாக முரசொலி நாளிதழ் விமர்சித்துள்ளது.
இதுவரை முதலில் 450 கோடி ரூபாயும், பின்னர் 450 கோடி ரூபாயும் ஒன்றிய அரசிடம் இருந்து தரப்பட்டது. இதுவும் வழக்கமாக வரும் நிதி தானே தவிர, இப்போது ஏற்பட்ட புயல் --- மழை -- வெள்ளச் சேதங்களில் இருந்து மீட்கத் தரப்பட்ட சிறப்பு நிதி அல்ல.
இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் செலவுகளை சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநிலப் பேரிடர் நிவாரண நிதி (SDRF) என்ற நிதி உள்ளது. எந்தெந்த மாநிலத்திற்குஇந்த நிதி எவ்வளவு என்பதை ஐந்தாண்டு காலத்திற்கு ஒருமுறை ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் நிதிக் குழு (Finance Commission) தீர்மானிக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டினுடைய SDRF--க்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 1,200 கோடி ரூபாய் ஆகும். இதில் 75 விழுக்காட்டை, அதாவது 900 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தரவேண்டும். 25 விழுக்காட்டை, அதாவது 300 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஏற்றிடவேண்டும்
ஒன்றிய அரசிடமிருந்து நமக்கு வந்த 900 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டு நமது SDRFக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல.
ஒன்றிய அரசிடம் பேரிடர் நிவாரணத் தொகையாக 68 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இருக்கிறது. அதில் இருந்து தான் கேட்கிறோம். கொடுக்க மனமில்லை. அதனால் அவர்கள் கொடுக்கவில்லை.
ஆனால், 'காங்கிரஸ் ஆட்சியை விட இரண்டரை மடங்கு அதிகமாக பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கு நிதி கொடுத்ததாக' திருச்சி கூட்டத்தில் பிரதமர் பேசி பேசியுள்ளார்