1. Home
  2. தமிழ்நாடு

பொங்கல் நேரத்தில் விலை கிடு கிடு உயர்வு..!

1

பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் முழுவதும் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அப்போது பூக்கள் விலை பலமடங்கு அதிகரிக்கும்.

அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,000 வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி மார்க்கெட்டில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்தது. அதன்படி நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை விற்பனையாகிறது. முல்லை பூ ரூ.2000, பிச்சி பூ ரூ.2000, கனகாம்பரம் ரூ.1000, அரளி ரூ.450க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சம்பங்கி, வாடாமல்லி, கனகாம்பரம், ஜாதிமல்லி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலையும் உயர்ந்துள்ளதால் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வந்ததால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.

Trending News

Latest News

You May Like