ஜனாதிபதி திரெளபதி முர்மு மெட்ரோ ரயிலில் பயணம்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/1147b87202981b52c83d0a71e0943fec.jpg?width=836&height=470&resizemode=4)
கடந்த 31-ம் தேதி பாராளுமன்ற கூட்டுத்தொடரில் பேசிய ஜனாதிபதி, நாடு முழுவதும் மெட்ரோ விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு நேற்று காலை திடீரென சென்ற ஜணாதிபதி பொதுமக்களுடன் ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணத்தின் போது டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் விகாஸ் குமாரும் உடனிருந்தார். மேலும், ரயிலில் பயணம் செய்த பள்ளி மாணவிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.
திரௌபதி முா்மு, தில்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த 2-ஆவது குடியரசுத் தலைவா் ஆவாா். கடந்த 2012-ஆம் ஆண்டு, அப்போதைய குடியரசுத் தலைவரான பிரதீபா பாட்டீலும் தில்லி மெட்ரோ ரயிலில் பயணித்தாா்.இது தொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தில்லி மெட்ரோ ரயிலில் புதன்கிழமை பயணித்தாா். அப்போது பள்ளி மாணவா்களுடன் கலந்துரையாடிய அவா், மாணவா்களின் வருங்கால திட்டங்கள் குறித்து கேட்டறிந்தாா்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
President Droupadi Murmu travelled in Delhi Metro and interacted with school children during the ride.
— President of India (@rashtrapatibhvn) February 7, 2024
President Murmu also flagged off shuttle bus service between Central Secretariat Metro Station (Gate 4) and Amrit Udyan (Gate 35) for visitors coming to Amrit Udyan at every… pic.twitter.com/ECCk8HtI2K