ராமர் கோயிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/bf0bedeb3af21894b54d4dbcf38e2547.webp?width=836&height=470&resizemode=4)
அயோத்தி ராமர் கோவில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் அதில் கலந்து கொண்டனர். அப்போது குடியரசுத் தலைவர் இந்த விழாவில் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.கோவிலின் கருவறையில் பால ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்தார். அப்போது முதல் அயோத்தி ராமர் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதற்கு பிறகு முதல் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்தார்.
இதற்காக, உத்தரப் பிரதேசத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ஆம்மாநில ஆளுநர் ஸ்ரீமதி ஆனந்திபென் படேல், மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார்.
முதன்முதலாக அயோத்தி சென்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்து சிறப்பு ஆராதனை செய்தார். முன்னதாக ஹனுமன் கார்ஹி கோயிலுக்கும் சென்றார்.
President Droupadi Murmu had Darshan and performed Puja at Shri Hanuman Garhi temple, Ayodhya. pic.twitter.com/cJO4AfIBD9
— President of India (@rashtrapatibhvn) May 1, 2024