1. Home
  2. தமிழ்நாடு

இன்று ஒடிசா, ஆந்திராவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சுற்றுப்பயணம்..!

1

ஒடிசாவின் பாரிபடாவில் நடைபெறும் அகில இந்திய சந்தாலி எழுத்தாளர் சங்கத்தின் 36-வது ஆண்டு மாநாடு மற்றும் இலக்கிய விழாவின் தொடக்க நிகழ்வில் இன்று 20-ம் தேதி ஜனாதிபதி கலந்து கொள்கிறார். அதே நாளில், குலியானாவில் ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியையும் அவர் திறந்து வைக்கிறார்.  

அதை தொடர்ந்து பஹத்பூர் கிராமத்தில் திறன் பயிற்சி மையத்தை நாளை 21-ம் தேதி ஜனாதிபதி திறந்து வைக்கிறார். இதையடுதது பதம்பஹார் ரயில் நிலையம் செல்லும் அவர், மூன்று ரயில்களைக் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். புதிய ரைரங்பூர் அஞ்சல் கோட்டம் திறப்பு, ரைரங்பூர் அஞ்சல் கோட்டத்தின் நினைவு அட்டை வெளியிடுதல் ஆகிய நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கிறார். 

தொடர்ந்து, பதம்பஹார் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்கான திட்டப் பணிக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர்  அவர் பதம்பஹரில் இருந்து ரைரங்பூருக்கு பதம்பஹார்-ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜனாதிபதி  பயணம் செய்கிறார். 

அன்று மாலை, புர்லாவில் உள்ள வீர் சுரேந்திர சாய் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் 15-வது ஆண்டுப் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்கிறார். அதை தொடர்ந்து 22-ம் தேதி, சம்பல்பூரில் உள்ள பிரம்ம குமாரிகள் ஏற்பாடு செய்துள்ள புதிய இந்தியாவுக்கான புதிய கல்வி என்ற தேசிய கல்விப் பிரசாரத்தை ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார். 

பின்னர் ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தி செல்லும் ஜனாதிபதி, அங்கு ஸ்ரீ சத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். 

Trending News

Latest News

You May Like