மே தினத்தை கொண்டாடிய பிரேமலதா விஜயகாந்த்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/449d4ed58959717d4cee4bee603834d6.jpg?width=836&height=470&resizemode=4)
பொது செயலாளர் பிரேமலதா தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட உழைப்பாளிகளுடன் தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் மே தினம் கொண்டாடப்பட்டது.
தேமுதிக தொழிற்சங்கத்தினர் சார்பில் கொடியேற்றப்பட்டது.. இதில் தொழிலாளர்களுக்கு நல உதவிகள் வழங்குதல் மற்றும் தொழிற்சங்கத்தினருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு மே தினமானது உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இதில் கட்சி சேர்ந்த தொழில் சங்கத்தினர் நிர்வாகிகள் தொண்டர்கள் உறுப்பினர்கள் மகளிர் அணியினர் என பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்த மே தின கொண்டாட்டத்தின்போது தொழிலாளர் ஜோதி ஏற்றப்பட்டது அந்த ஜோதியினை பிரேமலதா அவரிடம் தொழிலாளர்கள் வழங்கினர் அவர் தொழிலாளர்களுடன் கையில் ஜோதி ஏந்தி அப்படி நடந்து சென்று மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமாதியில் பூஜை செய்ததுடன் வணங்கி மரியாதை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.