முதல்முறையாக கொடியேற்றிய பிரேமலதா: பாதியிலேயே அறுந்து விழுந்ததால் பரபரப்பு..!

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இன்று 28.01.2024 ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்டம், ஒன்றியம், தகரம், பகுதி, வட்டம், கிளை கழகம், கிராமங்கள் வரை உள்ள நமது தேமுதிக கழக கொடியினை ஏற்றி பட்டொளி வீசி பறக்க விட வேண்டுமென கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளராக முதல்முறையாக கோயம்பேட்டில் கொடியேற்றிய பிரேமலதாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி... திடீரென கொடி பாதியிலேயே அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின் மீண்டும் கொடி ஏற்றினார் பிரேமலதா விஜயகாந்த். அப்போது தொண்டர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர்
#WATCH | தேமுதிக பொதுச்செயலாளராக முதல்முறையாக கொடியேற்றிய பிரேமலதா: பாதியிலேயே அறுந்து விழுந்ததால் பரபரப்பு#SunNews | #DMDK | #Vijayakant | #Election2024 pic.twitter.com/DTmk5MRkU6
— Sun News (@sunnewstamil) January 28, 2024