வேலூரில் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி... ரூ.50,000 வழங்கிய ரயில்வே அதிகாரிகள்!

திருப்பதி பெண்கள் பெட்டியில் தனியாக பயணித்த 4 மாத கர்ப்பிணி பெண், பாலியல் தொல்லைக்கு ஆளாகி ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இது தொடர்பாக கே.வி.குப்பத்தை சேர்ந்த ஹேமராஜை (30) ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வந்ததால் கர்ப்பிணிப்பெண் உயிர் தப்பினார். ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதால் தலையில் ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்ட காரணத்தால், அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்து சிகிச்சை கொடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை நேரில் பார்த்து கருணைத்தொகையை ரயில்வே அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மற்றும் சென்னை ரயில்வே மருத்துவர் அலுவலர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து தொகையை வழங்கினர்.