1. Home
  2. தமிழ்நாடு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..!

1

கர்நாடகத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள பெண்கள் அளித்த புகார்களைத் தொடர்ந்து, ஜெர்மனியிலிருந்து பெங்களூரு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள், பெண் கடத்தல் வழக்குகள் தொடா்பாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாலியல் வழக்கில் சிக்கியுள்ள ரேவண்ணாவை 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் நேற்று (ஜூன் 18) உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா, பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மருபுறம், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு உடந்தையாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவரது தாயார் பவானி ரேவண்ணாவுக்கு  கர்நாடக உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

Trending News

Latest News

You May Like