1. Home
  2. தமிழ்நாடு

தேர்தல் நடக்கும் இடத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு! வேட்பாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு !

தேர்தல் நடக்கும் இடத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு! வேட்பாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு !


பீகார் மாநிலத்தில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை முதல் தொடங்கியது. இன்று முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.கொரோனா ஊரடங்கு காலத்தில் நடைபெறும் முதல் சட்டப் பேரவைத் தேர்தல் இது தான்.எனவே, மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, வாக்குச்சாவடிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு வழங்க ஏதுவாக சானிடைசர்கள் தயார் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய அரசு 30 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை குவித்துள்ளது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமுள்ள தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அவுரங்காபாத்தின் திப்ரா பகுதியில் இன்று இரண்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வெடி குண்டுகளை கைப்பற்றிய சிஆர்பிஎப் போலீசார், அதனை வெடி குண்டு நிபுரணர்கள் உதவியோடு செயலிழக்கச் செய்தனர். மேலும், அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like