இன்று இரவு முதல் 8 மணி நேரம் மின்தடை..!

இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுகமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் அவற்றை இந்தியா பாதுகாப்பு படைகள் இடைமறித்து தடுப்பது, தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவம், பஞ்சாப் எல்லையை குறிவைத்து தற்போது தாக்குதல் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் பஞ்சாபில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் தாக்குதல் பரபரப்புக்கு மத்தியில் பஞ்சாப்பில் இரவு நேர மின்தடை அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பஞ்சாபின் எல்லை மாவட்டமான குர்தாஸ்பூரில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழுநேர மின்தடை அமல்படுத்தப்படுகிறது. அதாவது தினமும் பஞசாப்பின் எல்லை மாவட்டத்தில் மறுஉத்தரவு வரும்வரை தினமும் 8 மணி நேரம் மின்தடை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே சமயம் மருத்துவமனை, சிறைச்சாலைகள் உள்ளிட்ட முக்கிய அத்தியாவசிய பகுதிகளில் மின்தடைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் எல்லையில் போர் பதற்றம் அதிகமாக உள்ளதாக அங்கு மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இரவு நேரம் தாக்குதல்களை சமாளிக்கப்படும் என்றும், இந்தியா ராணுவம் ஹை அலர்ட்டில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.