1. Home
  2. தமிழ்நாடு

பிரபல சீரியல் நடிகையை கண்ணீரில் ஆழ்த்திய பெரும் சோகம்!

1

கேளடி கண்மணி மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் சின்னத்திரையில் அறிமுகமாகும் முன்பே திருமணமாகி முதல் கணவருடன் ஒரு மகள் உள்ளார். அவருடன் ஏற்பட்டகருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர். இவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது? அவர் யார்? என்ற எந்த விவரம் எதுவும் தெரியவில்லை.இவர் ‘செவ்வந்தி’ தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். 

திவ்யா ஸ்ரீதர் கேளடி கண்மணி' சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது, அந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்த அர்னவ் மீது திவ்யாவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்பில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்த வந்த நிலையில், இருகுடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டு எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இதையடுத்து, திவ்யா கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டு அறிவித்தார்.திவ்யாவிற்கு கடந்த ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது செவ்வந்தி சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை திவ்யா ஸ்ரீதரின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 59 வயதான இவரது தாயார் நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (ஜூன் 12) அவர் காலமானார். இது சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like