1. Home
  2. தமிழ்நாடு

நெல்லைக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!

1

பொங்கல் பண்டிகை விடுமுறைக்கான ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு கடந்த செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட நிலையில், சில மணி நேரங்களிலேயே அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்தது.

ரயில், பேருந்து போக்குவரத்து முன்பதிவு கிடைக்காத பயணிகள், சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்புக்காகக் காத்திருந்தனர். இந்நிலையில், தாம்பரம் - திருநெல்வேலி இடையே ஜனவரி 13, 16-ம் தேதிகளிலும் திருநெல்வேலியிலிருந்து ஜன. 12, 14, 17-ம் தேதிகளிலும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 18 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 3 ஏசி 3 டயர் கோச்சுகளும், 9 - ஏசி 3 டயர் எகானமி கோச்சுகள், 2 ஸ்லீப்பர் கோச்சுகள், 3 ஜெனரல் செகன்ட் கிளாஸ் கோச்சுகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் இருந்து இரவு 9.50க்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் காலை 11.15க்கு திருநெல்வேலி சென்றடையும். அதே போல் மறுமார்க்கமாக, திருநெல்வேலியில் இருந்து பகல் 2.45க்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் காலை 3.15க்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 14 மற்றும் 16-ம் தேதிகளில் திருநெல்வேலி வரை சிறப்பு ரயிலும், மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து ஜனவரி 15 மற்றும் 17ம் தேதி ஜன் சதர்ன் விரைவு ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like