1. Home
  2. தமிழ்நாடு

இன்று பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் விநியோகம்..!

1

தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரேசன் கடைகள் மூலம் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரூ.1,000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்திற்காக இன்று (ஜன.7) முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளது. மேலும், கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கனில் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் அந்த தேதியில் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் மற்றும் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இன்று முதல் டோக்கன் வழங்கப்பட உள்ள நிலையில், ஜனவரி 10ம் தேதி முதல் ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 10 முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பினை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஜனவரி 13ம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பினை பெற முடியாதவர்கள், ஜனவரி 14ம் தேதி பெற்று கொள்ளலாம் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.

ஜன.10 முதல் பொங்கல் பணம் ரூ.1000. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது. மேலும், அதே தேதியில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதனால், ஒரே நாளில் ₹1000 வங்கிக் கணக்கிலும், ரேஷன் கடைகள் மூலம் ₹1000 ரொக்கமாகவும் கிடைக்கும்.

Trending News

Latest News

You May Like