பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு.. கனிமொழி சொன்ன பரபர கருத்து..!

2019 ஆண்டு இளம்பெண்களை குறிவைத்து 9 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தராஜன், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரோன் பால், பாபு உள்ளிட்டோர் கைது செய்யப்பனர்.
அன்று அதிமுக ஆட்சி இருந்ததால் குற்றம்சாட்டப்பட்டவர்கள்அதிமுக நிர்வாகிகளுடம் தொடர்புடையவர்கள் என்பதால் காவல்துறையினர் மெத்தனம் காட்டியதாக விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஆறு வருடங்களாக நடைபெற்று வந்தது.மேலும் பாதிக்கப்பட்ட 48 பெண்களிடம் ஆதாரம் பெறப்பட்டது.
இதனை விஞ்ஞான முறையில் வீடியோவை மீட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுமார் 1500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு கோவை மகளிர் கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினி தேவிக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டு உத்தரவிட்டார்.
இதனையடுத்து இந்த குற்றம்சாட்டபட்ட 9 பேருக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம் 85 லட்சம் அளிக்க உத்தரவிட்டது.
முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புக்கு திமுக எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றுவதற்கு முன்பாக பெண்களின் பாதுகாப்பு காக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் தற்பொழுது நடந்து உள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி நந்தினி தேவி மிகவும் கடுமையான தண்டனையை வழங்கியுள்ளார். குறிப்பாக இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாக வந்து சாட்சிகளை வழங்கினர். இது மிகவும் வரவேற்கத்தக்கது.
இளம்பெண்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு பெண்களும் ஒரு சிறிய பிரச்சனை வரும் பொழுது காவல்துறையினரை அணுகி தீர்வு காண வேண்டும். குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலானவர்கள் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் என்பதால் தான் அவர்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறினார்.
தற்பொழுது பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளது.தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தமிழக அரசு தரப்பில் மட்டும் இன்றி காவல்துறையின் தரப்பிலும் இளம் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டும்
.மேலும் பெண் பிள்ளைகள் வளர்பின் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும் குறிப்பாக ஒரு பெண்ணின் உடை, கீழ்படிந்து நடக்க வேண்டும். எதிர்த்து பேசக்கூடாது. வெளியில் செல்ல கூடாது உள்ளிட்டவைகள் நம் அனைவரிடமும் மாற வேண்டிய ஒன்றாகும் என்று கூறினார்.