விஜயகாந்தை பார்த்து கலக்கத்தில் அரசியல்வாதிகள்! காரணம் என்ன தெரியுமா?
தமிழக அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்த் தற்போது களத்திலேயே இல்லாமல் போய்விட்டார். ஆனால் அவர் வந்த போது இருந்த வேகம் அரசியல் தலைவர்கள் அனைவரையும் அச்சம் கொள்ள செய்தது. அதே நேரத்தில் மக்கள் அவருக்கு பெரும் ஆதரவு கொடுத்தனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சட்டசபையிலேயே பேசியவர் அவர். நல்ல முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென அவருடைய உடம்பில் ஏற்பட்ட பிரச்னைகளால் பல சிக்கல்களை சந்திக்க நேரிட்டது. அதற்கான சிகிச்சைகள் வெளிநாடுகளில் சென்று எடுத்து வந்தார். தற்போது அவர் உடல்நிலை நன்கு தேறிவருவதாக கூறப்படுகிறது. அதனால் அவர் மீண்டும் பழைய உத்வேகத்துடன் களத்திற்கு வருவார் என அவரது தொண்டர்கள் கூறுகின்றனர்.
அதிலும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் விஜயகாந்த் உடல்நிலை தேறி வருவது அரசியல் பெரும் புள்ளிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது உள்ள அரசியல் வெற்றிடத்தை கண்டிப்பாக அவர் நிரப்புவார் என்று பலரும் நம்புகின்றனர்.
newstm.in