1. Home
  2. தமிழ்நாடு

கருப்பு இனத்தவரை சுட்டுக் கொன்ற போலீஸ்! பற்றி எறியும் அமெரிக்கா !

கருப்பு இனத்தவரை சுட்டுக் கொன்ற போலீஸ்! பற்றி எறியும் அமெரிக்கா !


அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியா நகரத்தில் கருப்பு இனத்தைச் சேர்ந்த ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றதால், அந்நகரமே போராட்டகளமாக மாறி பற்றி எரிந்து வருகிறது.

பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ளது பிலடெல்பியா நகரம். அங்கு வாலஸ் (27) என்ற கருப்பு இனத்தவர் கையில் கத்தியுடன் திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து சரணடைய எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், வாலஸ் போலீஸ் உத்தரவை மறுத்ததோடு அவர்களை தாக்கவும் முயற்சி செய்தாதக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் வாலஸை சுட்டு கொன்று விட்டனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பர் இனத்தை சேர்ந்த வாலஸை போலீசார் சுட்டுக் கொன்றதை கண்டித்து அந்த நகரம் முழுக்க ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனால், அந்த நகரத்தில் நேற்று முன்தினம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலீசார் விசாரணையில், வாலஸ் என்ற அந்த நபர் ராப் இசை கலைஞர் என்றும், போலீஸ் வன்முறைக்கு எதிராக அவர் தனது மேடை கச்சேரிகளில் பாடி வருபவர் என்றும் தெரிய வந்துள்ளது.

Trending News

Latest News

You May Like