கடற்கரை சாலையில் பொது மக்களுக்கு போலீசார் தடை..!
குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்றும் நாளையும் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று உத்தரவிட்டுள்ளார். அதேபோல காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,புதுச்சேரிகடற்கரை சாலையில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், கடலில் குளிக்க தடை விதித்து ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை வெளி மாநிலத்தில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் சோகத்துடன் திரும்பிச் சென்றனர்