1. Home
  2. தமிழ்நாடு

பாமக வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு தடையா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

Q

பாமக முழு நிலவு மாநாடு கடைசியாக 2013 ஆம் ஆண்டு நடைபெற்றது.

அப்போது வெடித்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாமக முழு நிலவு மாநாடு நடத்தப்படவில்லை. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது பாமக. இந்த மாநாடு நிர்வாகக் குழு தலைவராக அக்கட்சியின் மாநில தலைவரான அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது ஏற்பாட்டில் நடைபெறும் முதல் மாநாடு என்பதால் அதற்கான பணிகளை ஓடி ஓடி கவனித்து வருகிறார் அன்புமணி ரமதாஸ். இந்நிலையில் பாமக மாநாட்டிற்கு அனுமதி அளிக்கக்கூடாது பொன்னுரங்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் மாமல்லபுரம் அருகே 11ஆம் தேதி நடைபெற உள்ள பாமக வன்னியர் சங்கத்தின் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு அனுமதி வழங்கக்கூடாது என தெரிவித்திருந்தார்.

மேலும் 2013ல் நடந்த பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் கலவரத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்றும், இதனைக் கருத்தில் கொண்டு தற்போது மாநாட்டிற்கு அனுமதி வழங்கக்கூடாது மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாநாட்டில் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், பொது அமைதிக்கு குந்தகம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சித்திரை முழு நிலவு மாநாட்டு நிகழ்ச்சிக்கு 42 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இதனைக்கேட்ட சென்னை உயர் நீதிமன்றம் பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு தடைக்கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் வரும் 11ஆம் தேதி சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெறுவது உறுதியாகியுள்ளதால் பாமகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like