1. Home
  2. தமிழ்நாடு

பிப்ரவரி மாதம் மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!

1

பிரதமர் மோடி சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை துவங்கி வைக்க சென்னை வந்திருந்தார். அதைத்த்தொடர்ந்து, அவர் ராமர் கோயில் பிராணப் பிரதிஷ்டையை முன்னிட்டு, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். நேற்று அயோத்தியில் ராமர் கோயில் பிரான பிரதிஷ்டையில் கலந்துகொண்டார். இதனை நாடே விழாவாக கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி பிப்ரவரி 2ம் வாரத்தில் மீண்டும் சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தவும், மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டமிட்டார். அதன் ஒருபகுதியாக அவர், ’என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் நடைபயணத்தை கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கினார். ராமேஸ்வரத்தில் நடைபெற்ற இந்த பயணத்தின் துவக்க விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

தனது பயணத்தை பிப்ரவரி 2ம் வாரத்தில் நிறைவு செய்ய உள்ளார். இதற்கான நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பிப்ரவரி 2வது வாரத்தில் பிரதமர் மோடி சென்னை வரவுள்ளதாக கூறப்படுகிறது.இந்த ஆண்டு 3வது முறையாக பிரதமர் தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like