1. Home
  2. தமிழ்நாடு

மான் கீ பாத் நிகழ்வில் மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி..!

1

பிரதமர்  மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் மான் கீ பாத் எனும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். பாராளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த 3 மாதங்களாக இந்த நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசத் தொடங்கிய மோடி, நண்பர்களே கடந்த பிப்ரவரி முதல் வந்த ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் உங்களுடன் பேசும் இந்த வாய்பபு கிடைக்காமல் நான் தவித்தேன். 

தற்போது மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நான் மீண்டும் எனது குடும்ப உறுப்பினர்களான நாட்டுமக்கள்  மத்தியில் வந்துள்ளேன். 2024 மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டுக்கள். இந்திய அரசியலமைப்பு மீதும் ஜனநாயகத்தின்மீதும் மக்களின் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நன்றி என்று தெரிவித்தார். 

மேலும் ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் வகையில்  ஹூல் நிவாஸ் நேற்று கொண்டாடப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச யோகா தினம் குறித்தும், அடுத்த வருடம் நடக்க உள்ள பாரீஸ் ஒலிம்பிக் குறித்தும்  பேசினார்.   

Trending News

Latest News

You May Like