ராமேஸ்வரம் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்..!

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 06) ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கோவிலில் அவர் சிறிது நேரம் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியதை அளிக்கப்பட்டது.