ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!
தமிழ்நாடு பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுக தலைமையிலான பாஜகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
இந்நிலையில் ஜூலை 27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வருகை தர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏற்கனவே இருமுறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனிடையே பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்திலும் பேச உள்ளதாக தகவல்.வெளியாகி உள்ளது.
இந்த சூழலில் பிரதமரின் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். முன்னதாக, 26-ந்தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கவிருக்கிறார்.
அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில் பிரதமர் மோடியின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஜனவரி மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், தங்கள் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும், 7 முறை பிரதமர் மோடி தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.