1. Home
  2. தமிழ்நாடு

தயவு செய்து இப்படி செய்யாதீங்க... துடிதுடித்து பலியான கர்ப்பிணி பெண்.!

1

திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி பகுதியில் வசித்து வரும் மாது மகள் ஹேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு இரண்டு வயதில் மெய்யழகன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இன்று காலையில் அவருக்கு வயிற்று வலி அதிகமாக இருப்பதாக கூறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் உடனே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

கர்ப்பிணி பெண் பலி

ஆனால் அதனை ஏற்க மறுத்து ஹேமலதா வீட்டிற்கு சென்றுள்ளார், வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்திலேயே ஹேமலதாவிற்கு வலி ஏற்பட்டு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸில் இருந்த அவசர மருத்துவ உதவியாளர்கள் மூலம் ஹேமலதாவின் தொப்புள் கொடியை தூண்டித்துள்ளனர். பெண் வீட்டாரின் வர்ப்புதலால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லாமல் ஹேமலதாவிற்கு முதல் பிரசவமான 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குனச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிக  ரத்தபோக்கின் காரணமாக உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டிலேயே பிரசவம் – துடிதுடித்து பலியான கர்ப்பிணி பெண்.!

இந்நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்  சிகிச்சை பலனின்றி ஹேமலதா உயிரிழந்தார். இதனை அடுத்து உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டிலேயே குழந்தை பிறந்து அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like