1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் பப்ஜி செயலிக்கு நிரந்த தடை! மத்திய அரசு அதிரடி !

இன்று முதல் பப்ஜி செயலிக்கு நிரந்த தடை! மத்திய அரசு அதிரடி !


நாடு முழுவதும் இன்று முதல் பப்ஜி செயலிக்கு நிரந்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான சீனாவுடன் எல்லைப் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்துத.

இதனால், சீனாவுக்கு சொந்தமான டிக் டாக், ஷேர் இட் உள்ளிட்ட மொபைல் போன் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, பிரபல விளையாட்டு செயலியான பப்ஜி உள்ளிட்டவற்றுக்கும் மத்திய அரசு தடை விதித்தது. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பப்ஜி செயலி நீக்கப்பட்ட நிலையில், இன்று முதல் அதை நிரந்தமாக தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, பப்ஜி செயலியை ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்கள் கூட அதை இனிமேல் பயன்படுத்த முடியாது.

Trending News

Latest News

You May Like