1. Home
  2. தமிழ்நாடு

திமுக, அதிமுகவை முந்தும் மக்கள் நீதி மய்யம்! தயார் நிலையில் தேர்தல் பிரச்சார வேன்!

திமுக, அதிமுகவை முந்தும் மக்கள் நீதி மய்யம்! தயார் நிலையில் தேர்தல் பிரச்சார வேன்!


விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம் முழுக்க தேர்தல் பிரச்சாரம் செய்ய, மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பிரச்சார வேன் தயார் நிலையில் உள்ளது.

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதும் இருந்து அக்கட்சி நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள் என பலர் பங்கேற்று ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்கு தான் தயாராக உள்ளதை நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில், பிரச்சார வேனை முன்னிலைப்படுத்தி உள்ளாராம்.சிகப்பு நிறத்தில் தயார் செய்யப்பட்டுள்ள அந்த வேனில், "தலைநிமிரட்டும் தமிழகம்" என்ற வாசகமும், கட்சி சின்னமான டார்ச் லைட் பளிச்சென இடம் பெற்றுள்ளது.

"மக்கள் நீதி மலர... தக்க தருணம் இதுவே" . என்ற பஞ்ச் டலாக்கும் டாலடிக்கிறது.

"தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கூட தேர்தல் பிரச்சார வேன் தயார் செய்யாத நிலையில், நடிகர் கமல்ஹாசன் அவர்களை முந்திவிட்டார் என்றும், இதில் இருந்தே எங்கள் பலத்தை தெரிந்து கொள்ளுங்கள்" என்றும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கர்ஜிக்கின்றனர்.

ஆக மக்கள் நீதி மய்யம் கர்ஜனை ஆரம்பமாகிவிட்டது....!

Trending News

Latest News

You May Like