1. Home
  2. தமிழ்நாடு

இவர்களை போல் அலங்கார பதவியில் இருப்பவர்கள் நாட்டை ஆளக் கூடாது- மு.க.ஸ்டாலின்..!

1

ஆளுநர், குடியரசு தலைவருக்கு நீதிமன்றம் காலக்கெடு விதிக்கலாமா? என மத்திய அரசு தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது. இதுதொடர்பாக துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் பேசுகையில், உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. குடியரசு தலைவரை நீதிமன்றங்கள் வழிநடத்த முடியாது. அவருக்கு எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என்று பேசினார்.


இவரது பேச்சும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக் கொண்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளை சிதைத்து வலதுசாரிக் கருத்துகளைத் திணிக்க முற்படும் தீங்கான செயல் அரங்கேறி வருகிறது.


இந்த விஷயம் ஆளுநர்கள், குடியரசுத் துணைத் தலைவர், மாண்புமிகு குடியரசுத் தலைவர் உட்பட அரசியலமைப்பு பதவிகளை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதில் இருந்து முளைத்தது. மக்களாட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தான் அரசை நடத்த வேண்டும். அலங்கார நியமனப் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் அல்ல.

எந்த தனி நபரும், அது எத்தகைய உயர் பொறுப்பில் இருப்பவரானாலும் அவர் சட்டத்துக்கு கட்டுப்பட்டு தான் நடக்க வேண்டும். இதைத் தான் உச்ச நீதிமன்றம் சுட்டி காட்டியது. வரலாற்று சிறப்புமிக்க அந்த தீர்ப்பு தவறான வழிமுறையைச் சரிசெய்யும் நகர்வு என்பது கவனிக்கத்தக்கது. இந்த சீர்திருத்த நடவடிக்கை பல ஜனநாயக விரோத சக்திகளை நிலைகுலைய வைத்துள்ளது. தற்போதைய தேவை என்பது இந்தச் சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைத்தப்படுவதை உறுதிசெய்வதே என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like