1. Home
  2. தமிழ்நாடு

செயினை பறிக்க முயன்ற இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!

செயினை பறிக்க முயன்ற இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!


பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற இளைஞரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து அவரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

வேலூர் மாவட்டம் ஊசூரில் சாலையில் சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செயினை பறிக்க முயன்றனர்.இதையறிந்த அப்பகுதி மக்கள் செயினை பறிக்க முயன்றவர்களை விரட்டிச் சென்றனர்.

இருவரில் ஒருவர் தப்பிய நிலையில் மற்றொரு நபர் தெள்ளூர் அருகே புதரில் ஒளிந்திருந்தார். அவரைபிடித்த அப்பகுதி பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். சரமாரியாக தாக்கினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் பொதுமக்கள் அந்த இளைஞரை ஒப்படைத்தனர். மக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த பின்னர் அரியூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட இளைஞர் ஊசூர் பகுதியை சேர்ந்த பாஸ்வா (21) என்றும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ள நிலையில் செயின் பறிப்பு வழக்கில் கடந்த ஆண்டு சிறை சென்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like