1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்..! நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் - அமைச்சர்

1

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது இயல்பை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. வரும் 15,16 மற்றூம் 17 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர்  அறிவுறுத்தியுள்ளார்.    

தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயாராக உள்ளனர். பால், குடிநீர், உள்ளிட்ட உணவுப் பொருட்களை மழைக்கு முன்பாகவே தயாராக வைக்க அறிவுறித்தியுள்ளோம்.  பொதுமக்களுக்கு உதவ தமிழ்நாடு முழுவதும் 60,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாநில அவசர கால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும் பொதுமக்களும் எந்த நேரமும் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பருவமழைக்கு முன்பாகவே அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் தொடர்ந்து நீர்நிலைகள் கண்காணிக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like