தாம்பரம் மக்களே..! மாநகர காவல் சார்பாக முக்கிய வேண்டுகோள்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/cf239aae3bc3da7e3441ff09daba81f8.jpg?width=836&height=470&resizemode=4)
பொது மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டிலிருந்து வர வேண்டாம் என்று தாம்பரம் மாநகர காவல் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கீழ்கண்ட சாலைகளில் குளம் மற்றும் ஏரிகள் நிரம்பியும் உடைந்தும் வெள்ளம் பெருக்கெடுத்து சாலையில் செல்வதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து முற்றிலுமாகவும் தடை செய்யப்பட்டுள்ளது.
சோழிங்கநல்லூர் சந்திப்பு முதல் மேடவாக்கம் குளோபல் மருத்துவமனை வரை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை மேம்பாலத்தில் மின் கம்பம் விழுந்துள்ளதால் மேம்பாலம் மூடப்பட்டுள்ளது.
காமாட்சி மருத்துவமனை சந்திப்பு முதல் ஈச்சங்காடு சந்திப்பு மற்றும் 20௦ அடி சாலை மூடப்பட்டுள்ளன.
400 அடி வெளிவட்ட சாலை, வண்டலூர் முதல் பூந்தமல்லி உள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
சித்தாலபாக்கம் முதல் மாம்பாக்கம் செல்லும் வழி தடை செய்யப்பட்டுள்ளது.
OMR சாலையில் கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்டு கேளம்பாக்கம் சந்திப்பில் இருந்து வண்டலூர் மார்க்கமாக திருப்பிவிடப்படுகின்றன.
தாம்பரத்திலிருந்து முடிச்சுர் செல்லும் சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.