சென்னை மக்களே உஷார்..! இன்று மதியம் 3 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/e592a4cc1514a5283533c29606bba931.png?width=836&height=470&resizemode=4)
சென்னையில் பெரும்பாலானோர் புறநகர் ரயில்களை தங்கள் அன்றாட பயணங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். அலுவலகங்கள், வேலைக்குச் செல்ல, பள்ளி கல்லூரிகளுக்குச் செல்ல என லட்சக்கணக்கானோர் நாள்தோறும் புறநகர் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட சில காரணங்களுக்காக அவ்வப்போது சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில் கடற்கரை- செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (மே 28) பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரத்து அறிவிப்பு காலை 9.30 மணி முதல் மத்திய 3 மணி வரை மட்டுமே. அதன் பின்னர், வழக்கம் போல இந்த வழியாக மக்கள் புறநகர் ரயிலில் செல்லலாம்.வார நாட்கள் என்பதால், இந்த ரயில் சேவை ரத்து காரணமாக வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.