1. Home
  2. தமிழ்நாடு

சென்னை மக்களே உஷார்.. இந்தப் பகுதிகளில் இன்று மின்சாரம் இருக்காது..!

சென்னை மக்களே உஷார்.. இந்தப் பகுதிகளில் இன்று மின்சாரம் இருக்காது..!


தமிழகத்தில் தொடர்ந்து மாதாந்திர மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று (30ம் தேதி) மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாவட்ட வாரியாக மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது எதிர்காலத்தில் மின் விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாக இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் விதமாக பழுதான கம்பிகள் அகற்றப்பட்டு புதிய கம்பிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய பணிகளின் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

அவ்வாறு மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பகுதிகளில் ஏற்படும் மின்தடை குறித்து குறிப்பிட்ட மின்வாரிய பொறியாளரால் செய்தித்தாள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் தகவல் வெளியிடப்படும். அந்த வகையில் சென்னையில் பூந்தமல்லி வடக்கு மற்றும் பொன்னேரி பகுதிகளில் இன்று (30ம் தேதி) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்குள் பணி முடிந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பூந்தமல்லி வடக்கு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் துணை மின் நிலையத்தின் கீழ் பயன்பெறும் காடுவெட்டி, வீரராகவபுரம், ஆவடி மெயின் ரோடு, அருணாசலம் நகர், மேட்டுப்பாளையம், ஆயில்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அதேபோல் பொன்னேரி பகுதியில் திருவாய்கண்டிகை, கரடிபுத்தூர், ஜி.ஆர் கண்டிகை, கன்னக்கோட்டை, சின்னபுலியூர், பெரியபுலியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like