சென்னை மக்களே..! நாளை முதல் இரண்டு நாட்கள் குடிநீர் நிறுத்தப்படுகிறது..!

சென்னை கோயம்பேடு ரவுண்டானா மேம்பாலத்துக்கு கீழ் உள்ள குடிநீர் பிரதான குழாயில் இணைப்புப் பணிகள் தொடர்ந்து 2 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளன.
இதையொட்டி வரும் 20-ம் தேதி (புதன்கிழமை) காலை 6 மணி முதல் 22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி வரை அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.